மனிதனைக் கொல்லப்போகும் கோழி இறைச்சி!

கோழி இறைச்சியில் அதிகளவு ஆன்ட்டிபயாடிக் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சி.எஸ்.இ (விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) நடத்திய இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில், அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின் தலைமை இயக்குனர் சுனியா கூறுகையில், ஆன்ட்டிபயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது.

கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டிபயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் ஆன்ட்டி பயாடிக்கினால், குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.

ஒரு கிலோ சிக்கனில் 3.37 முதல் 131.75 மைக்ரோகிராம் வரை ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் படிவுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டிபயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment