நயன்தாரா என்றாலே எப்போதும் சர்ச்சையான தகவல்கள் தான் வரும். ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல் ஒன்று அவரை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது.
திரையுலகில் 10 ரூபாய்க்கு உதவி செய்தாலே 10 பேரிடம் சொல்வோர் மத்தியில் நயன்தாரா, தன் மேக்கப்மேன், காஸ்டியூமர், ஹேர் டிரஸ்ஸர் உள்பட பலருக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறாராம். மேலும் சமீபத்தில் ஒரு வெள்ள நிவாரணத்திற்காக ரூ 10 லட்சம் கொடுத்துள்ளார்.
தன் படத்தின் தயாரிப்பாளர்கள் பேசிய பணத்தை தர முடியவில்லை என்றாலும், பெரிய மனதுடன் வேண்டாம் என்று சொல்லி விடுவாராம்.இப்படி யாருக்கும் தெரியாமல் நயன்தாரா பல உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சேவை பணி தொடர வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment