யாருக்கு-எதற்கு-ஏன் சுதந்திரம் என்பதறியாமல், 68-வது சுதந்திர தினத்தை அப்பாவித்தனமாக கொண்டாடும் மக்கள் ஒருபுறம். மறுபுறம் மோடி முதல் லேடி வரை ஊடகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை வலுக்கட்டாயமாக கொண்டாடச் சொன்ன இந்த சுதந்திரம் உண்மையில் எப்படி இருக்கிறது?
ஹுண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்துக் கொடுக்கும் ஜி.எஸ்.ஹெச் (GSH) என்கிற பன்னாட்டு நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகிறது. பிற பன்னாட்டு கம்பெனிகளைப் போலவே ஜி.எஸ்.ஹெச் -ம் தொழிலாளர் நல சட்டங்களை மயிரளவு கூட மதிப்பதில்லை. அதற்காகத்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

0 comments:
Post a Comment