செர்பியா நாட்டில் குடி போதையில் இருந்த நபர் ஒருவர் கரடி ஒன்றை இரும்பு கம்பியால் தலையிலடித்து கொன்றுள்ளார்.
செர்பியா நாட்டில் உள்ள எண்ணெய் வயலில் இரண்டு கரடி குட்டிகள் வாழ்ந்து வந்துள்ளன.
தங்களது அம்மாவை இழந்து வாழ்ந்து வந்த கரடிகளை மர்ம நபர்கள் இருவர் குடி போதையில் இரும்பு கம்பியை வைத்து அடித்துக்கொன்றுள்ளனர்.
உயிரிழந்த கரடியை அடித்த நபர் இழுத்து சென்றுள்ளார். இவர்கள் கரடியை தங்களுடன் காரில் எடுத்து சென்றனரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.
ஆனால் அக்கரடி அந்த இடத்தில் இல்லை என இந்த கானொளியை எடுத்து நபர் கூறியுள்ளார்.
அங்குள்ள எண்ணெய் வயலில் வேலைபார்த்து வந்த அலெக்ஸ் என்ற நபரால் எடுக்கப்பட்ட இந்த கானொளி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அலெக்ஸ் கூறுகையில், இந்த கரடிக்கு தானும் தனது நண்பர்களும் உணவு அளித்து வந்ததாகவும், இந்த மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் தான் இந்த கானொளியை வெளியிட்டதாக அலெக்ஸ் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment