நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் திருட்டு விசிடிகள் பர்மா பஜாரில் விற்பனை செய்வதைத் தெரிந்து கொண்டு தனது உதவியாளர்கள் உதவியுடன் அங்கே சென்று அந்த வியாபாரிகளை கையும், களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அந்தச் சந்திப்பில் அவர் பேசியபோது, “சென்னை பர்மா பஜார் கடை வீதிகளில் எனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் திருட்டு விசிடி அதிகமாக விற்பனையாகிறது என்று தகவல் கிடைத்தது. இதற்கு என்று உருவாக்கப்பட்ட ரகசிய அறைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டு விசிடிகள் குவிக்கப்பட்டிருந்தன.
தியேட்டருக்கு வரும் கூட்டம் குறையுமே என்று யோசிக்க வேண்டாம்.. மாற்று வழியில்லாதபோது குறைந்தபட்ச நஷ்டத்தை சம்பாதிப்பதுதான் புத்திசாலித்தனம்..!

0 comments:
Post a Comment