கோர விபத்து தவிர்க்கப்பட்டது! வெறும் 1000 அடி வித்தியாசத்தில் நடுவானில் கடந்துசென்ற விமானங்கள்!

கொல்கத்தா அருகே நடுவானில் பறந்த பயணிகள் விமானமும், சரக்கு விமானம் ஒன்றும் விமானியின் சாமர்த்தியத்தால் மோதலில் இருந்து தப்பித்துள்ளது.

வங்காளதேச விமானம் ஒன்று, அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு 148 பயணிகளுடன் சென்றுள்ளது.

அந்த விமானம், கொல்கத்தா வான் எல்லையில் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டபோது, எதிரே சவுதி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானமும் அதே உயரத்தில் வந்துள்ளது.

இதைப்பார்த்த பயணிகள் விமானத்தின் விமானி, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு தனது விமானத்தின் பறக்கும் உயரத்தை 29,000 அடியாக குறைத்துள்ளார்.

அப்போது எதிரே வந்த சரக்கு விமானம் 32,000 அடி உயரத்தில் பறந்த வேளையில், பயணிகள் விமானம் மீண்டும் 33,000 அடி உயரத்தில் பறக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கட்டுப்பாட்டறையின் உத்தரவின் பேரில், மீண்டும் 33,000 அடி உயரத்தில் பயணிகள் விமானம் பறந்ததால் வெறும் 1,000 அடி உயர வித்தியாசத்தில் இரு விமானங்களும் கடந்து சென்றுள்ளன.

மேலும், விமான மோதல் தவிர்க்கப்பட்டதோடு, பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானியின் சாமர்த்தியத்தால் 148 பயணிகள் உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment