சமந்தாவின் உடையால் பரபரப்பு?

நகை கடை திறப்பு விழாவுக்கு சமந்தா கவர்ச்சி உடை அணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

நடிகைகள் படங்களில் கவர்ச்சியாக தோன்றுவது சகஜம். ஆனால் பொது விழாக்களில் பெரும்பாலும் அதை தவிர்த்தனர். கால்கள் தெரிய ஆடை உடுத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். சிலர் சேலை உடுத்தி வந்தார்கள். நகை கடை மற்றும் ஜவுளி கடை திறப்பு விழாக்களில் இப்படித்தான் நடிகைகளை பார்க்க முடிந்தது.

ஆனால் சமந்தா முதல் தடவையாக இதை முறியடித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த நகை கடை திறப்பு விழாவில் வயிறு தெரியும்படி கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார். கடையில் திரண்டு இருந்த பலரது கண்களும் அவரது வயிற்று பகுதியை மொய்த்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.

வெளியில் சமந்தாவை காண பெரும் கூட்டம் இருந்தது. நல்லவேளையாக அவர்களிடம் சிக்கவில்லை. பாதுகாவலர்கள் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவிட்டனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment